ஆரோக்கியமான வாழ்வில் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின்கள், கனிமச்சத்துகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்றவை நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, பழங்களை சாப்பிடும் நேரமும், அளவும் மிக முக்கியம்.
மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், அன்னாசி போன்ற அதிக சர்க்கரை மற்றும் அதிக GI கொண்ட பழங்கள் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடும். எனவே இவற்றை அளவுக்கு மீறாமல், மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உதாரணமாக, ஆப்பிள் துண்டுகளை பீனட் பட்டர் உடன் அல்லது பெர்ரிகளை கிரேக் தயிருடன் சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் பழங்களை தனியாக சாப்பிடாமல், புரோடீன் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. இதனால் சர்க்கரை மெதுவாக இரத்தத்தில் உறிஞ்சப்படும்.
பழங்களைச் சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் காலை உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவோடு சேர்த்து ஆகும். ஆனால் இரவில் தூங்குவதற்கு முன் அல்லது நள்ளிரவில் பழங்களை சாப்பிடக் கூடாது, இது சர்க்கரை அளவில் திடீர் உயர்வை ஏற்படுத்தக்கூடும்.
அதிக GI கொண்ட பழங்களை குறைவாகவும், குறைந்த GI (ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, கிவி, ஆரஞ்சு) கொண்ட பழங்களை அளவோடு சாப்பிடுவது பாதுகாப்பானது.
ஸ்மூத்தி, ஜூஸ், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் சர்க்கரை விரைவாக உயர்ந்துவிடும்.
முடிவாக, பழங்கள் ஆரோக்கியம் தருபவை தான், ஆனால் அவற்றை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான வகையில் சாப்பிடுவதுதான் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.