சமீப ஆண்டுகளில் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம் செல்லும் ஆர்வலர்கள் ஆகியோருக்கு திடீர் மாரடைப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதயம் நம் உடலின் முக்கிய உறுப்பாகும்; இது ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. ஆனால், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களும், ஃபிட்னஸில் முனைவோர்களும் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது, பொதுமக்களிடையே பெரும் கவலையும் குழப்பமும் உருவாகியுள்ளது.

Indian Heart Association வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஏற்படும் மாரடைப்புகளில் 50% மரணங்கள் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே நிகழ்கின்றன. அதிலும் அவர்களில் பெரும்பாலோருக்கு இதய நோய்கள் பற்றிய முன்சிகிச்சை வரலாறே இல்லை என்பது சோகமான உண்மை. இதன் முக்கிய காரணிகளில் ஒன்று மரபணுக்களும், குடும்ப வரலாறும் ஆகும். சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் அல்லது இதய நோய் பீதியால் ஏற்படும் அபாயங்கள் மரபணு வழியாகவே ஏற்படுகின்றன.
அதிகமான மன அழுத்தமும் இதயத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பணிப் பீடையில் இருக்கும்வர்கள் பலர் வெளியே ஆரோக்கியமாக தோன்றினாலும், உள்ளே நிலையான மன அழுத்தத்துடன் இருப்பதால் ரத்த அழுத்தம், தமனிக் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இவை தவிர, கண்டறியப்படாத உயர் ரத்த அழுத்தமும் பெரிய அபாயம். இது “சைலன்ட் கில்லர்” என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அடையாளங்கள் இல்லாமல் இருப்பதோடு திடீரென மாரடைப்பை உண்டாக்கும்.
முறையற்ற உடற்பயிற்சியும் முக்கியக் காரணியாக விளங்குகிறது. வழக்கமாக பயிற்சி செய்வது நல்லது என்றாலும், திடீரென கடுமையான பயிற்சியில் ஈடுபடுவது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சிலர் சிக்ஸ் பேக் வைத்திருப்பதை ஆரோக்கியத்தின் குறிகாட்டியாக நினைப்பது தவறான புரிதலாகும். வெளியே சீராகத் தோன்றினாலும், உள்ளே கொலஸ்ட்ரால் சிக்கல்கள், இன்சுலின் பிரச்சினைகள் இருந்தாலும் தெரியாது.
அதிகமாக அனபோலிக் ஸ்டீராய்ட்ஸ், ப்ரோட்டீன் பவுடர்கள், எனர்ஜி டிரிங்ஸ் போன்றவை கூட இதயத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இதயத்தை பாதுகாக்க முழுமையான தீர்வாக, வழக்கமான பரிசோதனைகள், ஆரம்பக் கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை தேவைப்படுகிறது. மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் இதய செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியும். ஆரோக்கியம் என்பது வெளிப்படையாக மட்டுமல்ல, உள் பராமரிப்பும் அவசியமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.