சென்னை. மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதால், உயர்க்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 19% உயர்ந்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறும் நோக்கில், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடியும், மதுரை, கோவை, சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க ரூ.225 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் புதிய வகுப்பறை, அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்காக இந்த நிதி செலவிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கும் புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்காக புதுமைப்பெண் திட்டத்துக்கு ₹420 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.