புதுடில்லி: நமது பக்கத்து நாடான மாலத்தீவுக்கு இந்தியா ரூ.600 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.20,516 கோடி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பக்கத்து நாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியிலிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கு ரூ.600 கோடியும், பூடானுக்கு ரூ.2,150 கோடியும் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.