சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, வெளிநடப்பு ஏன் என்று விளக்கினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது. டில்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும்.
கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. கடந்த 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, பா.ஜ.க., தலைவர்கள், அ.தி.மு.க., தலைவர்களுடன் கூட்டணி அமைத்து, வரும், 2026-ல் நடக்கும் சட்டப் பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, போட்டியிட உள்ளோம். வரும் தேர்தலில், பிரதமர் மோடி தலைமையில், தமிழக அ.தி.மு.க. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி அமைக்க உள்ளோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமையும். வெற்றி பெற்ற பிறகு அமைச்சரவை குறித்து முடிவு எடுக்கப்படும். எங்களுடன் கூட்டணி சேர்வதற்கு அ.தி.மு.க., எந்த கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது. கூட்டணி சேர்வதால் இரு தரப்புமே பலன் அடையும்.
அ.தி.மு.க.வில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும், அவர்களுக்கு என்ன பங்கு என்பது பின்னர் விவாதிக்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளார். கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி இல்லை… இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், அமித் ஷா கூட்டணி என்று சொல்லவே இல்லை.ஏதோ தந்திரம் காட்டுகிறீர்கள்.பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.சில வார்த்தைகளை தானே பிடுங்கி சில பரபரப்பான செய்திகளை தேடுகிறீர்கள்.
உங்கள் அறிவியல் மூளையை பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம். அ.தி.மு.க., – பா.ஜ.க., கூட்டணி அறிவிக்கப்பட்டு, ஒரு வாரமாகி விட்டதால், இந்த குழப்பம் கவனம் பெறுகிறது. மேலும் அதிமுக செயற்குழு கூட்டமும் வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.