சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நீங்கள் என்ன சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வார். பழனிசாமியின் முகம் வாடி விட்டது; அவரை விட்டுவிடுங்கள். 2011 டிசம்பரில், நான் உட்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். சசிகலா பெங்களூரு சென்ற பிறகுதான் அனைவரும் ஒன்று கூடி என்னை கட்சிக்குள் கொண்டு வந்தனர்.
எடப்பாடியும் மற்றவர்களும் ஒன்று கூடி என்னை துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கச் சொன்னார்கள். ஆர்கே நகர் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை, சசிகலா சொன்னதால் போட்டியிட்டேன். நான் முதல்வர் பதவிக்கு நிற்பேன் என்று எடப்பாடி பழனிசாமி பயந்தார். மற்றவர்களை முதல்வராக்கக்கூடிய இடத்தில் நான் இருந்தேன். பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒப்புக்கொள்ளாமல் தப்பி ஓட முயன்றனர், அவர்களைப் பாதுகாத்து பழனிசாமியை முதல்வராக்கினோம்.

நான் அதிமுகவுக்கோ அல்லது பழனிசாமிக்கோ வாக்கு கேட்பேன் என்று நான் சொல்லவில்லை. அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் செல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்க்கத் தயங்குவார். எடப்பாடி பழனிசாமியுடன் செல்வது தற்கொலைக்குச் சமம். டெல்லியில் பென்ட்லி காரில் யாருடன் சென்றார் என்பது எனக்குத் தெரியும். கூட்டணியில் பழனிசாமி முடிவெடுப்பார் என்று நயினார் சொன்னதால் நாங்கள் கிளம்பினோம்.