சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- குயிலாக கூவினாலும், மயில் போல் ஆடினாலும் ஆதிக்க மொழியால் ஏமாறுகிறோம். அன்னை தமிழைக் காக்க நம் ஆவியைக் கொடுக்கத் தயங்குகிறோம். இந்தியை பலவிதமாக திணிக்க திட்டமிட்டுள்ள பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரே வெளிப்படையாக மிரட்டுகிறார்.
40 லட்சம் தமிழக மாணவர்களின் கல்வியில் விளையாடுகிறதா பாஜகவின் அரசியல்? இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு உடனடியாக நிறுத்தாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.