நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- “இன்று நாமக்கல், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
கடைசி நிமிடத்திலும் அனுமதி வழங்கப்படுகிறது. கரூரில், மதிய நேரம் வரை இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மதியத்திற்குப் பிறகுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூட்டமாக மாறி வருகிறது. காவல்துறை மற்றும் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். திருச்சியில் பிரச்சாரம் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் கழித்து திருவாரூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா தடைகளையும் மீறி, 2026 தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இருக்கும். தவெகத்திற்கு மட்டும் 10 புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதாகைகள் வைத்ததற்காக தவெகவிற்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்படுகிறது. கட்சி நிர்வாகியும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த சவால்கள் எங்களுக்கு மட்டுமே,” என்று அவர் கூறினார். சனிக்கிழமைகளில் மட்டும் வரும் நபர் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தாரா என்று கேட்டதற்கு, சி.டி. நிர்மல்குமார், “முதலில் அவர் வகிக்கும் துறை பற்றிச் முதலில் சொல்லட்டும்” என்றார்.