ராஞ்சி: அடுத்த 5 ஆண்டுக்கு நானே தலைவர்… லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி தலைவராக சிராக் பஸ்வான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூடியது. இதில் மத்தியஅமைச்சராகவும், தற்போது கட்சியின் தலைவராகவும் உள்ள சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் வரையில் இருக்கும் வகையி்ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் கட்சியின் தேசிய செயற்குழு, கூட்டத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய அளவில் பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.எங்கள் அமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் கூட்டணியில் போட்டியிட வேண்டுமா அல்லது தனித்து போட்டியிட வேண்டுமா என ஆலோசிக்கப்பட்டது.
நாட்டின் மிக முக்கிய தலித் தலைவர்களில் மறைந்த எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானும் ஒருவர் என சிராக் பஸ்வான் கூறினார்.