அரியலூர்: அரியலூரில் நேற்று பங்கேற்றவர்களிடம் அவர் கூறியதாவது:- பாஜக கூட்டணியில் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும்போது, அந்த கூட்டணியில் நாங்கள் எப்படி இருக்க முடியும்? பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை.
தவெகத் தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. பெரம்பலூருக்கு விஜய் சென்றபோது இரவு என்பதால், அங்கு பிரச்சாரம் செய்யவில்லை.

தவெகத் தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் உருவாகும். அமமுக இணையுமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் மற்றொரு கூட்டணியும் நிச்சயமாக அமைக்கப்படும். தமிழ்நாட்டில் நிச்சயமாக நான்கு முனைப் போட்டி உள்ளது. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.