கோவை: பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- 2026 தேர்தலை நோக்கி, பா.ஜ., வெற்றிகரமாக நகர்கிறது. தமிழகத்தில் மொழி அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். பாஜக அரசு எந்த வகையிலும் இந்தியைத் திணிக்கவில்லை. வேறு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
அதனால் தமிழுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க. குழந்தைகளை அரசியலுக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் அரசு மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்ப அறிவு மற்றும் விரிவுபடுத்தப்பட்ட கல்வி போன்ற தேவைகள் உள்ளன. ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.