விழுப்புரம்: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணமா? என்று கேள்வி எழுப்பி ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க வந்த கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணம் என்ற செய்தியை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன். பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் என்பதை எப்படி ஏற்பேன். மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். காலச்சூழலால் பா.ம.க.வில் ஏற்பட்ட நெருக்கடியை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறோம்.
ஒன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து இருவரிடமும் பேசி வருகின்றேன். திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன். எந்த பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ராமதாசும், அன்புமணியும் சந்தித்தால் கட்சி வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய அளவில் உதவும். அன்புமணியிடமும் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கிறோம். ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசினார் பிரச்சனைகள் தீர்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.