சென்னை: நான், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்கி எறியும் வரை இருப்பேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது “முதலமைச்சர் ஸ்டாலின், பொய்யெல்லாம் சொல்லிவிட்டு அடுத்தக்கட்டத்திற்கு போய்விட்டார். ஒரு மனிதருக்கு எப்பொழுது வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டதோ அவருக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது என அர்த்தம்.
முதலமைச்சருக்கு பதில் கூறினால், அண்ணாமலை இருக்க வேண்டும் என்கிறார். நான், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிடுங்கி எறியும் வரை இருப்பேன்” என்றார்.