மானாமதுரை: செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2024-ல் எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் காரணம். பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன?
நயினார் நாகேந்திரன் மனநிலை காரணமாகவே கூட்டணியை விட்டு வெளியேறினோம். நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார். நயினார் அகம்பாவத்தில், ஆணவத்தில் பேசுகிறார்.
இ.பி.எஸ். போதும் என எண்ணுகிறார் நயினார் நாகேந்திரன். செங்கோட்டையனுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக யூகத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.