காஞ்சிபுரம்: தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன். பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள். பா.ம.க.வை பலவீனப்படுத்த தி.மு.க. முயல்கிறது. பா.ம.க. வை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. பா.ம.க.வில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும். பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும். சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர். அமைதியாக இருப்பது எனது பலம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சல், திட்டம் என்னிடம் உள்ளது.
தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, நமக்குள் பிரச்சனை வேண்டாம். அண்ணன், தம்பியாக இருக்கும் நமக்குள் குழப்பம் வேண்டாம். 4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக தி.மு.க. ஏமாற்றி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.