பாட்னா: பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பீகாரில் பா.ஜ.க. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், “டெல்லியில் பாஜக வெற்றி பெற்றாலும் பீகாரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் கூறலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. நாங்கள் பீகாரில் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சி அமைக்க முடியாது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா கூறுகையில், பீகாரில் லாலு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஜேடியூ செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், பீகாரில் தான் இருந்த போது தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது என்பதை லாலு நினைவில் கொள்ள வேண்டும்.