சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாமாகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், நமது ஆயுதப்படைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தின.

வீர, விவேகமான மற்றும் துல்லியமான தாக்குதலை நடத்தி, ஒரு மகத்தான வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதமர் மோடியின் வலுவான தலைமையை எடுத்துக்காட்டும் வகையில், தேசியக் கொடியுடன் 4 கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத் தலைநகர் சென்னையில் நாளை பிற முக்கிய நகரங்களில் நாளை பிற மாவட்ட நகரங்களில் மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், சட்டமன்றத் தொகுதிகள், தாலுகாக்கள் மற்றும் பெரிய கிராமங்களில் மே 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேசியக் கொடி ஏந்தி யாத்திரைகள் நடைபெறும்.
இதற்கான வழிகாட்டுதல்கள் கட்சித் தலைமையிடமிருந்து நிர்வாகிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். நமது வீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் பாராட்டு தெரிவிக்கவும், நமது நாட்டின் வெற்றியைக் கொண்டாடவும் நிர்வாகிகள் பெரிய அளவிலான யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.