மாநிலங்களவையில் வரி பகிர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாநிலங்களுக்கு இடையேயான வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க 16-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி., செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரி வரும் நிலையில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டை குறைக்க நினைப்பது நியாயமில்லை. எனவே, மக்களவையில் நிதிப் பங்கீடு தொடர்பாக விவாதம் நடத்த, அவையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.