சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:- முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், நான் நேரில் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தேன். அதேபோல், அவரது மூத்த சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்தேன்.

ஆனால், இந்த சந்திப்பை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, நான் திமுகவின் பி அணி என்றும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறேன் என்றும், திமுகவில் சேரப் போகிறேன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இதில் எந்த உண்மையும் இல்லை. இதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்.