சென்னை: 2026 மாநிலங்களவைத் தேர்தலில் மட்டுமே தேமுதிகவுக்கு இடம் கிடைக்கும் என்று அதிமுக கூறியுள்ள நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு இடம் வழங்கப்படும் என்று அதிமுக ஏற்கனவே உறுதியளித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இடம் அடுத்த தேர்தலில் இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அரசியலில் அனைத்துப் பயணமும் தேர்தலை நோக்கியே இருப்பதால், எங்கள் நிலைப்பாடும் அதை நோக்கியே இருக்கும். தேமுதிக தேர்தலை மனதில் கொண்டு பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும். அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக, எல்.கே. சுதீஷ் சனிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும், தேமுதிகவுடன் கூட்டணியில் தொடரும் என்றும் அதிமுக தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், அதிமுகவின் நிலைப்பாட்டில் பிரேமலதா அதிருப்தி தெரிவித்ததோடு, கூட்டணியில் தொடர்வது குறித்து திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை.
மேலும், மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.