சென்னை: த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி தயார் ஆகிவிட்டதால் விஜய் தலைமையில் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நாளை மறுநாள் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலுடன் கூடிய புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். இதையடுத்து பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று த.வெ.க.வில் இணைக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட உள்ளனர்.
அதிக உறுப்பினர்களை த.வெ.க.வில் இணைக்கும் நிர்வாகியின் இல்லத்திற்கே சென்று விஜய் கௌரவிப்பார் என கூறப்படுகிறது.