புதுடில்லி: ”பாஜக அரசு, கோடீஸ்வர நண்பர்களின், 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததால், வங்கித் துறை சிக்கலை சந்தித்து வருகிறது. ஊழியர்கள், மோசமான சூழலில், மன அழுத்தத்துடன் பணிபுரிகின்றனர்,” என, லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார். ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் குழு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து, எக்ஸ்-தள ராகுல் கூறியதாவது:- ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் குழுவைச் சந்தித்தேன். அவர்கள் சொன்ன விஷயங்கள் கவலையளிக்கிறது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் ஆயிரக்கணக்கான நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கித் துறையும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சுமையை தாங்கள் தாங்க வேண்டியதால், இளநிலை ஊழியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். மோசமான சூழலில் பணிபுரிகின்றனர். திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு கடன் வழங்குவதாக வங்கி தெரிவித்தால், பணியாளர்கள் இடமாற்றம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். இரண்டு சம்பவங்களில் தற்கொலைகள் நடந்துள்ளன.
இதுபோன்ற அநீதிகளை எதிர்கொள்ளும் ஊழியர்கள் https://rahulgandhi.in/awaazbharatki என்ற இணையதளத்தின் மூலம் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக காங்கிரஸ் கட்சி போராடும். இவ்வாறு ராகுல் கூறினார்.