நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியோ, 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவோ சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கவில்லை. இப்போது மத்திய பாஜக அரசு சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு நீதி வழங்கப்படும்.
பல சமூகங்கள் பயனடையும். மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் முடிக்கப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு சமூக நீதியை வழங்கவும், சமூகங்களுக்கு உரிய சலுகைகளை வழங்கவும் உதவும். பாஜக-அதிமுக கூட்டணியைக் கண்டு திமுக பயப்படுகிறது. தவெக தலைவர் விஜய் திமுகவுக்கு எதிரான தனது எதிர்ப்பில் உறுதியாக இருந்து எங்கள் கூட்டணியில் இணைந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்.

திமுவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு முக்கியம். எனவே, திமுவை தோற்கடிக்க விரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்போம். இது சீமானுக்கும் பொருந்தும். எம்ஜிஆர் வேறு, நடிகர் விஜய் வேறு. விஜய் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுவதில்லை. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. அவரைப் பார்க்க வருபவர்களில் பெரும்பாலோர் 18 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.