தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படடுள்ள மேயர் சண்.ராமநாதனுக்கு பொதுமக்கள் தரப்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக சட்டமன்ற தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்.ராமநாதன் யார்? அவர் மேற்கொண்ட கட்சிப்பணிகள், முன்னேற்றம் குறித்து பார்ப்போம். ஊர்: தஞ்சாவூர், தொகுதி: தஞ்சாவூர், படிப்பு: எம்.பி.ஏ., பிறந்த தேதி: 14.07.1976.
ஜாதி: இசை வேளாளர், தற்போதைய கட்சி பதவி: தஞ்சாவூர் மாநகர செயலாளர். 1993ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது திமுக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு என்பார்கள். அதை அவ்வாறு பின்பற்றி வெற்றியை நோக்கியே தனது பயணத்தை தொடங்கினார். 1996ல் 40வது வட்ட திமுக நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்.
2006ம் ஆண்டு தஞ்சாவூர் நகராட்சி (அப்போது) மாமன்ற உறுப்பினராக தேர்வானார். 2011ம் ஆண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2011 முதல் 2016 வரை மாமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
2016 தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2017 தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டார். 2022ல் 3வது முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வானார். தொடர்ந்து கட்சி தலைமை தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண்.ராமநாதனை தேர்வு செய்தது. 2023 தஞ்சாவூர் கழக மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
2022 முதல் 2026 தற்போது வரை மேயராக இருந்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியலில் வலுவான பாதையை உருவாக்கி கொண்ட சண்.ராமநாதன் சட்டமன்ற தேர்தலுக்கு புதிய முகம். இவர் மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கட்சிப்பணியில் வெகு தீவிரமாகவும், மேயராக மக்கள் பணிகளை விரைந்தும், துரிதமாகவும் செய்து செயல்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளார். கட்சிப்பணியில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தார்.
கட்சி தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்தி பாராட்டுக்களை பெற்றவர். 50 மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என்று இருந்த மாநகரக் கழகத்தின் அமைப்பை மகளிர் மற்றும் இளைஞர் அணியை 1000 பேர் கொண்ட அணிகளாக மாற்றி உள்ளார். 10000 மேற்பட்ட மகளிர் உறுப்பினர்களையும். 8000 க்கும் மேற்பட்ட இளைஞர் உறுப்பினர்களையும் சேர்த்து சிறந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம் மாநகர பகுதி கழகத்தில் 250 க்கு மேற்பட்ட புதிய வழக்கறிஞர்களை கழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையும் கொண்டனர். 50000 மேற்பட்ட புதிய உறுப்பினர்களை மாநகரக் கழகத்தில் சேர்த்து கட்சி மென்மேலும் வளர்த்து வருகிறார். கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.
இதுவரை 11.01.2026 1215 நாட்களில் 601 நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக ஆளுமையுடன் நடத்தி தலைமையிடம் நற்பெயரை பெற்றுள்ளார். அண்ணா, கலைஞர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் ஊர்வலங்களை வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் பேரணியாக நடத்தி உள்ளார். பொதுக்கூட்டங்களை மாநாடு அளவிற்கு பிரம்மாண்டமாகவும், முதல்வர், துணை முதல்வர் தஞ்சை வருகையின் போதெல்லாம் மிக பிரம்மாண்டமான வரவேற்பு தந்து பாராட்டுகளை குவித்துள்ளார். மாநகர கழகம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட கிட்டத்தட்ட 23 அணிகள் நான்கு பகுதிகளிலும் கட்சி தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் அவர்களால் 700 க்கும் மேற்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக மாவட்ட கழக செயலாளர் அவர்கள் வழிகாட்டுதலோடு கழகப் பணிகள் மேற்கொண்டுள்ளார்.
1993 லிருந்து 2025 வரையில் கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தஞ்சாவூர் மாநகராட்சி தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யங்குளம் பழமை மாறாமல் புரணமிக்கப்பட்டதிற்காக ஒன்றிய அரசால் இண்டூரில் நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவிலே மூன்றாம் இடமும் தமிழ்நாட்டில் முதல் இடத்திற்கான விருதை பெற்று சாதனை படைத்தார். சிட்டிஸ் 2.0 திட்டத்தின் கீழ் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாநகரம் தூய்மை மாநகரமாக மாற்றிட 168 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு கீழ் ICCC மூலம் மாநகராட்சி செயல்பாடுகளை கண்காணித்து ஏதேனும் குடிநீர், பாதாள சாக்கடை கழிவு நீர், குப்பை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்தமைக்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இந்தியாவில் 14 இடமும் தமிழ்நாட்டில் முதலிடம் விருதை பெற்றது. இவ்வாறு மேயராக சிறப்பான பணிகளை மேற்கொண்ட சண்.ராமநாதனை கட்சி தலைமை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.