சென்னை: எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை; மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக அரசைக் கண்டித்து சென்னை தி.நகரில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி; பாஜக அதிமுகவை மிரட்டியதாக முதல்வர் கூறுகிறார். எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை; மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டது.

அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். எங்கள் கூட்டணி ஒரு வலுவான, வெற்றி பெறும் கூட்டணி; இன்னும் பல கட்சிகள் இணைய வருகின்றன என்றார்.