இன்று உலகளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. அதே சமயம், மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் கேன்சர் ரிசர்ச் (ஏஏசிஆர்) சமீபத்திய அறிக்கை, மது அருந்துதல் அனைத்து புற்றுநோய்களிலும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.
புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளில், உடல் பருமன் மற்றும் சிகரெட் புகைப்பிற்கு அடுத்தபடியாக மது அருந்துதல் மூன்றாவது இடத்தில் உள்ளது. “அதிகப்படியான மது அருந்துதல், சில வகையான தலை மற்றும் கழுத்து புற்றுநோய், உணவுக்குழாய் மற்றும் மார்பகம், பெருங்குடல், கல்லீரல் மற்றும் வயிறு புற்றுநோய்கள் உட்பட ஆறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.
அளவாக மது அருந்துவது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, ஆல்கஹால் தொடர்பான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை 8 சதவீதமும், அனைத்து புற்றுநோய்களின் அபாயத்தையும் 4 சதவீதமும் குறைக்கலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எனவே, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.