வால்பாறை: வால்பாறை பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் புல் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது. சில ஆறுகள் ஓடைகளாகத் தோன்றுகின்றன. அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. காங்கிரீவ் அருவி, பிர்லா அருவி, இறைச்சல் பாறை அருவிகளில் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. சோலையார் அணையும் தண்ணீரின்றி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் வன விலங்குகள் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளன. இதனால் வால்பாறையை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு நாய், யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தஞ்சம் அடைந்து வருகின்றன. பொதுவாக, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, வன விலங்குகள் குட்டிகளைப் பெற்றெடுத்து, உணவு உண்ணப் பழகும் பருவமாகும். இதனால் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்கு குட்டிகளுடன் வரும் சிவப்பு நாய்கள், காட்டு மாடுகள், சிறுத்தைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு ஒன்றை ஒன்று பாதுகாத்து வருகின்றன.
சமீபத்தில் மானாம்பள்ளியில் யானைகள் சண்டையிட்டு பெண் யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடுமலை, பச்சமலை எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு நாய்களும், வில்லோனி எஸ்டேட், இஞ்சிப்பாறை மற்றும் செங்குத்து பாறை, குரங்குமுடி எஸ்டேட் பகுதிகளில் கரடி, யானைகளும் முகாமிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் தென்பட்டால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதிகள் வறண்டு கிடப்பதால், சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் வனப்பகுதிக்குள் நுழையவும், சாலையோரங்களில் சமைக்கவும், புகை பிடிக்கவும் ஆனைமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வனப்பகுதியில் தீ மூட்டுவது குற்றம் என தெரிவித்துள்ள வனத்துறையினர், பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.