கடந்த ஆண்டு மே மாதம், உள்நாட்டு சந்தையில் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் கடலை இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கடலை பருப்புக்கு, 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சகம், மார்ச், 27-ல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புள்ளி விவரப்படி 2024-25-ல் இந்தியாவில் 11.5 மில்லியன் டன் கடலை பருப்பு உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு உற்பத்தியான 11 மில்லியன் டன்னை விட 5 லட்சம் டன் அதிகம்.