சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு – ஒகேனக்கல், மைசூர் – பெங்களூரு மற்றும் மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 3 நாள் சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் நடந்து வருகின்றன. கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. இந்த சுற்றுலாத் திட்டங்கள் ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும்.
இந்த பேருந்துகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை அல்லது இரவில் சென்னை, வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக அலுவலகத்திலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை சென்னைக்குத் திரும்புகின்றன. சுற்றுலாத் தலங்கள் மற்றும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள்:

ஊட்டி: தொட்டபெட்டா சிகரம், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம்.
கொடைக்கானல்: தூண் பாறை, பசுமை சமவெளி, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஸ்டார் லேக் படகு கிளப், வெள்ளி நீர்வீழ்ச்சி.
ஏற்காடு – ஒகேனக்கல்: ஏற்காடு ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், ஏற்காடு படகு கிளப், ஒகேனக்கல் அருவி.
மைசூர்: பெங்களூரு: சாமுண்டேஸ்வரி கோயில், நந்தி, மைசூர் அரண்மனை, பிருந்தாவனம் தோட்டம், ஸ்ரீரங்கப்பட்டினம், திருப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா.
குற்றாலம்: குற்றாலம் நீர்வீழ்ச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை.
மூணாறு: மூணாறு மறையூர் புத்துணர்ச்சி முகாம், இரவிகுளம் வனவிலங்கு சரணாலயம், பிளாசம் பூங்கா. இந்த சுற்றுலா திட்டங்களில், தங்குமிடம் மற்றும் 6 வேளை உணவு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, வால்வோ சொகுசு பேருந்துகள், உயர் ரக சொகுசு பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட சிறிய சொகுசு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த திட்டங்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தில் (www.ttdconline.com) அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 7550063121 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.