மயிலாடுதுறை: அதிமுக பிரச்சார துணை செயலாளர் நடிகை கவுதமி நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஆதவன் அர்ஜுனனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை. அரசியலில் பல ஆண்டுகள் சாதனை படைத்த, படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகள் முதலமைச்சராக சிறப்பாக செயல்பட்ட பழனிசாமிக்கு எதிராக ஆதவன் அர்ஜுன் பேசுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிமுக ஆட்சியை அமைக்க பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான அரசு நிச்சயமாக அமையும் என்று அவர் கூறினார். தவெக அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, அது எப்போது முடியும் என்பது அவருக்குத் தெரியும் என்று கூறினார். சரியான நேரத்தில் சரியான முடிவை பழனிசாமி அறிவிப்பார் என்றார்.