சென்னை: மகளிர் நல நிதி பெறுவதற்கான விதிகளை தளர்த்த வேண்டும் என சட்டப் பேரவையில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் (பெருந்துறை) பேசியதாவது:-

மகளிர் நல நிதி பெறுவதற்கான தகுதிகள் அதிகமாகவும், விதிகள் கடுமையாகவும் உள்ளன. இதனால் பல பெண்கள் நல நிதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள் அதிக பயன்பெறும் வகையில், உரிமைகள் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.