சென்னை: இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் சீதாராம் அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:- சர்வதேச குவாண்டம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. நமது நாட்டில் குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மீதான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ‘நேஷனல் குவாண்டம் மிஷன்’ (NQM) என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல், குவாண்டம் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) குவாண்டம் தினத்தை முன்னிட்டு அந்த தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதாவது, நிபுணர் விரிவுரைகள், குழு விவாதங்கள், பயிற்சி பட்டறைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு நடத்தப்படும் உலக குவாண்டம் தின செயல்பாடுகள் குறித்த விவரங்களை ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.