சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொழில்முறை மற்றும் அரசியல் முடிவுகளும் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு எதிராக பரப்பப்படும் தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் ஊகங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
எங்கள் இருவருக்கும் தனித்துவமான வேலை வாழ்க்கை மற்றும் தனித்துவமான கருத்துக்கள் உள்ளன. நாங்கள் ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் கருத்துக்களை மதிக்கிறோம். எனவே, தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் பரஸ்பர நன்மைக்காக, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை எங்கள் தொழில் மற்றும் பொது வாழ்வில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அதிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அவருக்கு கட்சியில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு கட்டத்திலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி அதிபருமான மார்ட்டினின் மகளான டெய்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.