திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நிச்சயமாக பாடம் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமித் ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம். கொள்கை வேறுபட்டிருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

இந்தக் கூட்டணி வலுப்பெறுவதைக் கண்டு திமுக கூட்டணி பயப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அதிமுக. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமித் ஷா தெளிவான பதிலை அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.