ோவை: அண்ணா பல்கலைக்கழக பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணை மின்நிலையத்தில் நாளை (23-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், சூரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மியா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவின்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர், பொம்மனம்பாளையம்.
மேற்கண்ட தகவலை சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.