சென்னை: 2025-26 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

விண்ணப்பப் பதிவின் முதல் நாளில், 14,462 பேர் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாகவும், 70 ஆயிரத்து 584 பேர் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.