சென்னை: உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவுக்கான காலக்கெடு நேற்று முடிவடைந்தது.
முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி தேதி ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.

அதன் பிறகு, சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்களுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும். பொது சேர்க்கை ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கும்.
கலந்தாய்வு மற்றும் சேர்க்கை செயல்முறை முடிந்ததும், முதலாமாண்டு முதுகலை வகுப்புகள் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.