சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை திருத்தியது. அதன் பிறகு, தனிநபர் ஒருவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022 பிப்ரவரியில் மீட்டர் கட்டணத்தை திருத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய அரசு, 2 ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை.

அதாவது, மீட்டர் கட்டணம் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றது. இருப்பினும், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இந்த சூழலில், ஓட்டுநர் சங்கங்கள் கடந்த சில நாட்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், ரைட் வாய்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜாஹிர் உசேன், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். துறை சார்பாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், “கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.