சென்னை: கோடை காலத்திற்கு இதமாக, கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானத்திற்கு பதிலாக, இயற்கை வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் வெயில் காலத்தில் சூரியனிலிருந்து உருவாகும் கதிர்கள், உடம்பில் உள்ள ஆற்றல், நீர்ச்சத்துகளை உறிஞ்சி எடுத்துவிடுவதால், பலருக்கும் எந்த நேரத்திலும் தாகம் அதிகமாக எடுக்கிறது. எனவே இதனால் பலரும் வெயில் தாகத்தை தீற்ப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி பருகுவார்கள். ஆனால் அப்படி கார்போனேட்டட் பானங்களை குடிப்பதற்கு பதிலாக, இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரை குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
ஏனெனில் மற்ற பழங்களின் மூலம் தயாரித்த ஜூஸ்களை விட, நிறைய சத்துக்களைகொண்டது தான் இளநீர். இந்த இளநீரை குடிக்கும் போது அதிகஇனிப்பாகவும், வித்தியாசமான சுவையிலும் நிறைந்திருக்கும்.
இப்படிப்பட்ட இளநீரை நாள்தோறும் குடித்து வருவதன் மூலம், இதனால் உடம்பிற்கு கிடைக்கும் நிறைய நன்மைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
உடல் வறட்சியைத் தடுக்கிறது:
இளநீரை வெயில் காலத்தில் குடித்து வருவதால், இதில் உள்ள எலக்ரோலைட்டு என்ற சத்துக்கள், கனிமச்சத்துக்கள் போன்ற அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள நீர்ச்சத்துகளின் அளவை சீராக பராமரித்து உடம்பில் உள்ள வறட்சியை தடுக்கவும் உதவுகிறது.
சிறந்த ஆற்றல் நிறைந்த பானம்:
கடைகளில் வாங்கப்படும் கார்போனேட்டால் நிறைந்த பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் இளநீரை வாங்கிக் குடிப்பதால், உடம்பில் உள்ள ஆற்றல் ஊக்குவிப்பதோடு, எனர்ஜியையும் தருகிறது. மேலும் இதில் கலோரிகளின் அளவு குறைந்தளவும், கனிமச்சத்துக்கள் அதிகமஅளவும் இதில் நிறைந்திருப்பதால், உடம்பிற்கு தேவையான வேண்டிய அணைத்து ஆற்றலையும் இளநீரானது வழங்குகிறது.
இதயத்திற்கு ஏற்றது:
இளநீரில் அதிகளவு கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகளவு உள்ளதால் இது இரத்த அழுத்தத்தின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.