புது டெல்லி: ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து 54166 டன் நிலக்கடலையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்தையில் தானியங்களின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும் போது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தானியங்களை வாங்குகிறது.

இந்தச் சூழலில், விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 2024-2025-ம் ஆண்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மைசூர் பருப்பு உற்பத்தியில் 100 சதவீதத்தை கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து 54166 டன் பச்சைப் பயறு மற்றும் 50750 டன் நிலக்கடலையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் கொள்முதல் காலத்தை ஜூன் 26 வரை 15 நாட்கள் நீட்டிக்கவும் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புதல் அளித்துள்ளார்.