சென்னை: தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வெளியிட்ட செய்திக் குறிப்பு:- மேற்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாட்டால், வரும் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் முன்னிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.