சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோயில் இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும். அதன்படி, இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்க திட்டமிடப்பட்ட மின்சார ரயில் சிங்கபெருமாள் கோயில் – செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே இன்று மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோயில் இடையே ரத்து செய்யப்படும். இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.