சென்னை: பாஜக மாநில கட்சி செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழிவறையில் பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை ஒட்டி திமுகவினர் நடத்தும் அரசியல் கீழ்த்தரமானது. தமிழகத்தில் நடந்த ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலை அமலாக்க இயக்குனரகம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாஜக நடத்திய போராட்டத்தை, காவல்துறையைக் கொண்டும், பல்வேறு சட்ட விரோத, அராஜக வழிகளிலும் ஜனநாயக வழியில் ஒடுக்க திமுக அரசு முயற்சித்து தோல்வியடைந்தது.

காவல் துறையை அத்துமீறுவதாக குற்றம்சாட்டிய பாஜகவினரை கண்டித்தும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிராக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் கதவுகளில் முதல்வரின் படத்தை வரைந்து மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். காவல் துறையின் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகும் ஊழலுக்கு எதிராகக் கைவிடாமல் பாஜக தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் வழங்கி, தமிழக வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்து, மக்கள் உரிமைக்காக உழைத்து, அரசியல் சேவை செய்து வருகிறார், ஆனால், ஆண்களின் கழிவறையில் அண்ணாமலை புகைப்படத்தை ஒட்டி அசுத்தம் செய்ய, பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா? சென்னை மாநகராட்சி கழிப்பறை ஒப்பந்த மோசடி விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.