சேலம்: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ள 86% நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழையின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் விரைவாக நிரம்பின. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 86% நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இன்னும் பல நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேட்டூர் அணை 100% நிரம்பியுள்ளது, பவானிசாகர் அணை 80.8%, அமராவதி அணை 96.1%, வைகை அணை 89.8%. பேச்சிப்பாறை அணை 75%, கிருஷ்ணகிரி அணை 87.5%, சாத்தனூர் அணை 82.4%, சோலையார் அணை 97.7%, பரம்பிக்குளம் அணை 99.6%, ஆழியாறு அணை 98.6%. இடைவிடாத மழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் விரைவில் 100% நீர் மட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீரை கையாள தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்பாடுகளையும் எடுத்து வருகிறது.