சென்னை: மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடங்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்ட அவர், உடற்பயிற்சி உபகரணங்களை இயக்கி சோதனை செய்தார். இதேபோல் கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக ரூ.1.24 கோடி செலவில் சாந்தோம் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டினம்பாக்கம் லூப் ரோட்டில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் துணை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.