சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா நேற்று டிஜிபி சங்கர் ஜிவாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இரவு நேர கடைகள் எந்த தடையும் இல்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
வணிகர்கள் மீதான காவல்துறையின் அட்டூழியங்களைத் தடுக்க வேண்டும். மேலும், வணிகர்கள் மீதான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான வணிகர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

அபராதம், கைது போன்றவை தடுக்கப்பட வேண்டும். வணிகர்கள் மீது அரசு அதிகாரிகள் நடத்தும் அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் ஆர். ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.