சென்னை: டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்ட அலுவலர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்டப் பதிவுப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 உயர்நிலைப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான TNPSC குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் இம்மாதம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.