ஈரோடு: சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று வழிபாடு செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திமுக தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. இப்போது காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதாகக் கூறி கண்ணீர் வடிக்கிறார் நீலிக். இவ்வாறு அவர் கூறினார்.