ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மத்திய அரசு விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களும் கடந்த 11 நாட்களாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதன் விளைவாக, 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் கடந்த 19-ம் தேதி ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தற்போது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், 12 நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.