சென்னை: சென்னையில் பிரபலமான சுற்றுலா தலமான மெரினா கடற்கரை உட்பட 50 இடங்களில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்களை விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் தினமும் 1100 மில்லியன் லிட்டர் குடிநீரை விநியோகிக்கிறது. சுத்தமான தண்ணீராக இருந்தாலும், மக்கள் RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தெளிவான நீரைக் குடிக்க விரும்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கு திருப்தி அளிக்கிறது.
எனவே, அவர்கள் குடிநீருக்காக கணிசமான தொகையை செலவிடுகிறார்கள். வெளியே சென்றால், பாட்டில் குடிநீரை வாங்க குறைந்தபட்சம் ரூ.20 செலுத்த வேண்டும். இந்நிலையில், மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில், வட சென்னையில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, கொருக்குப்பேட்டையில் வைத்தியநாதன் பாலம் அருகில் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் 50 இடங்களில் RO முறையில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 5 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இலவச குடிநீர் மையங்களில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டாஸ்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் 1 லிட்டர், 150 மில்லி அளவுகளில் குடிநீரைப் பெறலாம். பாதுகாப்புக்காக அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தொட்டியில் குடிநீரின் அளவு குறைந்தால், சென்னை குடிநீர் வாரிய தலைமையகம், வார்டு மற்றும் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் வகையில் நவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குடிநீர் மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.